மின்வெட்டு நேர மாற்றம்!

நேற்று முதல் மூன்று நாட்களுக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாளாந்த மின் துண்டிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி நேற்று முதல், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு, மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.

மேலும், A முதல் L வரையிலான வலயங்களுக்கும், P முதல் W வரையிலான வலயங்களுக்கும் காலை 9.30 முதல் மாலை 5.30 வரையிலான நேரத்தில் 2 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

அத்துடன், இதே வலயங்களுக்கு மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையிலான நேரத்தில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை, குறித்த மூன்று நாட்களுக்கு கொழும்பு பிரதேசத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில் மூன்று மணித்தியாலங்கள்; மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *