
இலங்கைக்கு இன்று (ஏப்ரல் 26) காலை 3,600 மெட்ரிக் தொன் திரவ பெற்றோலியம் (LP) எரிவாயு கிடைக்கப்பெறும் என்று Litro Gas Lanka Limited தெரிவித்துள்ளது.
எரிவாயுவை ஏற்றி வந்துள்ள கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் எரிவாயு விநியோகம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
3,600 மெட்ரிக் தொன் எல்.பி எரிவாயுவை ஏற்றிய மேலும் ஒரு கப்பல் இந்த மாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி இலங்கையை வந்தடையும் என லிட்ரோ கேஸ் லங்காவின் தெரிவித்துள்ளது.
[embedded content]