மக்களின் போராட்டத்துக்கு மலிபன் நிறுவனமும் ஆதரவு.

நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலிபன் பிஸ்கட் நிறுவனமும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மலிபன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் இக்கட்டான காலங்களைக் கடந்து கொண்டிருக் கும் இவ்வேளையில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக செழித்தோங்கி யிருக்கும் உண்மையான இலங்கை வர்த்தக நிறுவனமாக மலிபன், தற்போதைய நிலையற்ற பொருளாதார நிலைமை காரணமாக அனைத்து இலங்கை யர்களும் அனுபவிக்கும் பாரிய இன்னல்களைக் கண்டு மிகவும் கவலையடைந்துள்ளது.100% உள்ளூர் நிறுவனமான மலிபன், பரஸ்பர விழுமியங்களுக்கு மதிப்பளித்து, மிகவும் அமைதியான கொள்கையைக் கடைப்பிடித்து, முழு இலங்கை மக்களையும் ஒன்றிணைத்து, தேசத்தின் எதிர்காலத்தை நம்பும் பெருமைமிக்க இலங்கை இளையோரின் இந்தப் புகழ்பெற்ற முயற்சியை பணிவுடன் பாராட்டுகிறது. இந்த ஒன்றுபட்ட எழுச்சியானது நிச்சயமற்ற எதிர்காலத்துக்கான புதிய நம்பிக்கைகளை ஒளிரச் செய்கிறது.கடந்த காலங்களில் பல சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொண்ட நாடு என்ற வகையில், இந்தப் பொருளாதார நிச்சயமற்ற நிலைகளினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதன்படி, நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் திறன்களின் அடிப்படையில் அரசியல் மற்றும் சமூக அமைப்பை உருவாக்க தொடங்கப்பட்ட அமைதியான மற்றும் மரியாதைக்குரிய சமூக இயக்கத்தை மலிபன் பாராட்டி ஆதரிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *