
இலங்கைக்கு கடன் கிடைக்க வேண்டும் எனில், இலங்கை தனது நாணயக் கொள்கையை கடுமையாக்க வேண்டும், கடன் பிரச்சனைகளை தீர்க்க வரியை உயர்த்த வேண்டும் என்று IMF வலியுறுத்துகிறது.
இலங்கை தனது கடன் நெருக்கடியை சமாளிப்பதற்கு நாணயக் கொள்கையை கடுமையாக்க வேண்டும், வரியை உயர்த்த வேண்டும், நாணய மாற்று விகிதங்களில் நெகிழ்வுத் தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடாகிய இலங்கை, கடன் சுமை காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணத்தை செலுத்த முடியாமலும், அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் அந்நியச் செலாவணியில் பாரிய வீழ்ச்சியையும் எதிர்கொண்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைக் கோரியுள்ளது
நிகழ்நிலை செய்தி மாநாட்டின் போது “கடந்த வார இறுதியில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கான தயாரிப்புகள் குறித்து பயனுள்ளதும் தொழில்நுட்பம் சார்ந்ததுமான விவாதங்களை நடத்தியுள்ளோம்” என்று IMF இன் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பதில் இயக்குனர் Anne-Marie Gulde-Wolf கூறினார்.
இலங்கைக்கு நிதியுதவியை பெறும் பொருட்டு இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி கடந்த வாரம் வாஷிங்டனில் IMF, உலக வங்கி, இந்தியா போன்றவற்றிடம் கலந்துரையாடி இருந்தார், அந்த கலந்துரையாடலின் மூலம் இலங்கை $51 பில்லியன் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கு அவகாசம் கிடைத்துள்ளது எனவும் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு வரி வருவாயை அதிகரிக்கும்படி அவர் இலங்கைக்கு அழைப்பு விடுத்தார்.
“பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க நாணயக்கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். இலங்கையில் நாணய மாற்று விகிதங்களில் நெகிழ்வுத் தன்மையையே சர்வதேச நாணய நிதியம்எதிர்பார்க்கின்றது எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடன் தொகையின் அளவு மற்றும் எவ்வளவு காலப்பகுதியில் கடன் கிடைக்கப்பெறும் என்பது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.