
யாழில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளிலும் விசர் நாய் கடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் யாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த குடும்பத் தலைவருக்கு கடந்த மாசி மாதம் தெருநாயொன்று கடித்துள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக அடுத்த நாள் காலை பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் மருத்துவரின் ஆலோசனையில் ஏற்பு தடுப்பூசி வழங்கப்பட்டது எனினும் விலங்கு விசர் நோய் தடுப்பூசி வழங்கப்படவில்லை.
இதேவேளை குறித்த குடும்பத் தலைவருக்கு நேற்றையதினம் திடீரென சுகயீனம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலமணிநேரங்களில் உயிரிழந்தார்.
குறித்த மரண விசாரனையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் முன்னெடுத்ததுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.