ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும்! – முன்னாள் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை பதவி விலகி புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

“தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் அரசாங்கத்தை அமைக்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் தயாரில்லை.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பதாகவும், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *