கொழும்பு, ஏப் 27
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று கண்டியிலிருந்து கொழும்புக்கு ஆரம்பித்துள்ள பேரணி இரண்டாவது நாளாக இன்று தொடர்கின்றது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் நேற்று ஆரம்பமானது. இந்தப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் விதமாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் பேரணி, மே தினத்தன்று, கொழும்பை வந்தடைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
