கொவிட் தொற்றாளர்களின் தற்போதைய நிலை..!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 128 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 290,705ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 997 பேர் இன்று வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264,755 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply