தென் கொரியா தூதரகத்தில் இருந்து மட்டக்களப்பு மாநகரிற்கு வருகை தந்திருந்த தொழில் துறை தொடர்பான உத்தியோகத்தர் மாநகர முதல்வருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதில் மட்டக்களப்பு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் கருப்பொருளை நோக்காக கொண்டமைந்த கலந்துரையாடலை மேற்கொள்ளப்பட்டது.
தென்கொரியாவில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை உண்டுபண்ணும் விதத்தில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்ற நிலையில். தென்கொரிய மேயருடன் அடுத்த கட்ட கலந்துரையாடலை நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


