
நாட்டில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் பகுதி மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக கடந்த 17நாட்களாக தொடர்ச்சியாக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மக்கள் பல்வேறு விதமாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் கபுடா.. கா.. காகா கோசங்கள் தற்போது வாகனங்களின் ஒலிகளாகவும் மாற்றமடைந்து பிரபலமாகி வருகின்றன.
இதேவேளை ரயில்களின் ஒலிகளும் தற்போது கபுடா.. கா.. காகா என்றவாறாக ஒலிகளை எழுப்பி பயணிக்கின்றது.