
தற்போதைய நாட்டு நிலை தொடர்பில் தந்தை ஒருவர் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்:
முதல் ஜனாதிபதி இருக்கும் போது ஆயிரத்து 500 ரூபாய் உழைத்தோம்.500 ரூபாவை மிச்சம் பிடித்தோம்.
இப்போது 2 ஆயிரத்து 500 ரூபா சம்பளம் கேட்க்கின்றோம்.அது கிடைப்பதில்லை. ஆகவே ஒரு கிலோ அரிசியும் ,தேங்காயும் வாங்கவே காசு சரியாக இருக்கும்.
இதுவே ஒரு குடிகாரன் என்றால் அந்த குடும்பத்தின் நிலை என்ன ?.இப்போது 2 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்தாலும்,கடையில் பொருட்கள் வாங்கச் சென்றால் 200 ரூபாய் கடன் வைக்கும் நிலையே காணப்படுகிறது.
முதல் கடைக்குச் சென்றால் ஒரு சொப்பிங் பை முழுவதும் பொருட்களை வாங்குவோம்.இப்போது சொப்பிங் பையே தேவை இல்லை என்றார்.