மஹிந்த ராஜபக்ஷவினை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் தரப்பிற்கு தலைமை தாங்குகின்றார் மஹிந்தானந்த அளுத்கமகே?

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவினை நீக்குவதற்கான அணியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்திற்குள் உருவாகியுள்ள புதிய அணிக்கு அவரே தலைமை தாங்குவதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே அவர் செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போது அரசு பதவி விலக வேண்டும் என்ற யோசனை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *