
”அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”நாங்கள் 13-ஆவது சட்டதிருத்தத்தை ஆதரிக்கிறோம். அந்த சட்டதிருத்தம் எதுவாக இருக்கிறதோ, அதை அவ்வாறே ஆதரிக்கிறோம். நாங்கள் இரட்டை நாக்கு கொண்டவர்கள் அல்லர். அங்கு ஒன்றும், இங்கு ஒன்றும் பேசுபவர்கள் அல்லர். நாங்கள் எங்கள் கொள்கையை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள்.
எங்களின் அரசியலமைப்பின் ஒற்றையாட்சி தன்மையை 13-ஆவது சட்டதிருத்தம் பாதிக்காது. இதை உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது. என் தந்தையும் 13வது சட்டதிருத்தை ஆதரித்தார். அவரது மகனாகிய நானும் அதையே தான் செய்வேன்.” – என்றார்.