
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டால் அதில் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவுக்கு முக்கிய பதவி வழங்கப்படாலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருஜெயசூரியவிற்கு முக்கிய பதவி வழங்கப்பட்டால், அவர் நாடாளுமன்றத்திற்கு தேசியப்பட்டியல் மூலம் திரும்புவதற்கு உதவ தயார் என பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக தற்போது இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் போது அரச தரப்பும், எதிர்கட்சிகளும் கருஜெயசூரியவிற்கு மிக முக்கிய பதவியை வழங்க தீர்மானித்துள்ளன.
இது குறித்து ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர்,
நான் எந்த பதவிக்கும் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவது எனக்கு தெரியும் என குறிப்பிட்டார்.
முறைப்படி அழைப்பு கிடைத்தால் அதனை பரிசீலிப்போம், சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்ற அடிப்படையில் நாட்டின் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் தயார், இந்த அமைப்பு மாதுளவாவே சோபித தேரரால் உருவாக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.