காணி உறுதிப்பத்திரங்களை கொள்ளையிட்டு முதியவர் படுகொலை

களனி – வாரகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிலர் பொல்லுகளால் தாக்கியதில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் காயமடைந்துள்ளார்.

வீட்டுக்குள் பிரவேசித்த நபர்கள் தந்தை மற்றும் மகனைத் தாக்கி அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த 63 வயதுடைய நபர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *