கொழும்பில் பிரபல கல்லூரியில் தீ விபத்து !

கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை புனித ஜோசப் கல்லூரியின் கட்டடமொன்றில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தீயணைப்புப் பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு செயற்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *