
இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுக் காலை கீரிமலையில் இடம்பெற்றது. கருணாகரன் அருட்சாந்தன் (வயது- 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வீட்டுக்கு வெளியே உள்ள மரத்தில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.