
சிறைச்சாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக வைப்பிலிடக் கூடிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சந்தேகநபர் ஒருவருக்கு வாரத்திற்கு 3,000 ரூபாவாகவும், கைதி ஒருவருக்கு மாதாந்தம் 3,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.