
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளை நாளை வழமைபோன்று சேவையில் ஈடுபடுத்த தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாளை நாடு தழுவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அரசாங்க தொழிங்சங்களும் போராட்டத்துக்கு ஆதரவாக கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.