மஹிந்த தலைமையில் மாத்திரமே சிரமங்களுக்கு மத்தியில் சவால்களை வெற்றிபெற்ற வரலாறு உண்டு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும், மேயர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

பிரதமருடன் அலரி மாளிகையில் இன்று (27) நடைபெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்திப்பில், மாவட்டத் தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆகியோர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது, மஹிந்த பெரும்பான்மை வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதமர் என்றும், மக்களின் இறையாண்மைக்கு பிரதமர் தலைவணங்கினால் அவர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிக்க வேண்டும் எனவும் பிரதேச சபைகளின் தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தெரிவித்தனர்.

அதற்கமைய மேற்படி தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தெரிவிக்கவும், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் மேயர்கள் தீர்மானித்தனர்.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தினால் மட்டுமே வெற்றிகொள்ள முடியும் என தெரிவித்த பிரதிநிதிகள், சிரமங்களுக்கு மத்தியில் இவ்வாறான சவால்களை வெற்றிகொண்ட வரலாறு இருக்குமானால் அது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாத்திரமே எனவும் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *