வியாழன், வெள்ளி, சனி மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

கொழும்பு, ஏப்ரல் 27: நாளை வியாழக்கிழமை முதல் வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *