கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எந்தவொரு அதிபரும், ஆசிரியரும் அல்லது கல்விசாரா ஊழியர்களும் கொவிட் தடுப்பூசியைப் பெறவில்லையென்றால், கல்வி அமைச்சு உடனடியாக உங்களுக்கு அறிவிக்கும். அத்தகைய நபர் இருந்தால், கொவிட் தடுப்பூசி பெற அவர் பணிபுரியும் வலய அலுவலகத்திற்கு கல்வி அமைச்சகம் தெரிவிக்கும்.

எனவே அத்தகையவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு தற்போது மாகாண மட்டத்தில் நடைபெற்று வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *