
யாழில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின், கலந்துரையாடலின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வருமோ தெரியாது. அதற்கு ஏற்ற வகையில் ஆதரவு கிடைக்குமோ என்றும் தெரியாது.
ஆனாலும் இவ்வாறு வந்தால் என்ன முடிவுகளை எடுப்பது என்பது தொடர்பில் எமது கட்சிக்குள்ளே கலந்துரையாடினோம்.
இதில் எங்களுக்கு உள்ளே கருத்து முரண்பாடு இல்லை.நடுநிலை வகித்தாலோ அல்லது ஆதரவு, எதிர்த்து வாக்களித்தால் என்ன விடயங்கள் இடம்பெறும் என கலந்துரையாடினோம்.
இன்றைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்- என்றார்.