தமிழர் பாரம்பரியங்களை கடைப்பிடிக்கும் வெளிநாட்டவர்! (படங்கள் இணைப்பு)

தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் நிறைந்த இன்றைய உலகில் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்கள் சிறிது சிறிதாக மறைந்துவருகின்றது.

இந்நிலையில் கலாசார பாரம்பரியங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஒவ்வொருவரும் ஈடுபடும்போது தான் மறைந்து கொண்டிருக்கும் கலாசார பாரம்பரியங்களுக்கு புத்துயிர் ஊட்டலாம்.

இந்நிலையில் தமிழர்கள் மறந்த கலாசார பாரம்பரியங்கள் வேற்று இனத்தவர்கள் தமது கலாசார பாரம்பரியங்களுக்குள் உட்செலுத்தி கடைப்பிடித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டவர் ஒருவரது திருமண நிகழ்வு எமது தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழர்களின் கலாசார உடையான வேட்டியினை அணிந்து மணமகன் காட்சியளிப்பதுடன் பெற்றோர்களும் வேட்டி சேலை அணிந்து இந்துசமய முறைப்படி திருமண நிகழ்வினை நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *