
கொழும்பு,ஏப் 27
உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளர்.
கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பில், சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டார்.
எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயிப்பதற்கு விலைசூத்திரமொன்று அவசியமென லிட்ரோ நியுவனத்தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.