யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் முதன்முறையாக முஸ்லிம் சமூகத்தினரரின் புனித நாளான இப்தார் நிகழ்வு நேற்றைய தினம்(26) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
சர்வமத தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பித்த இந் நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் எமது யாழ்ப்பாண பிரதேசத்தில் உள்ள அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் பொதுமக்கள் சேவை நிலையமாக எமது செயலகம் விளங்குவதால் அவர்களின் சமூகம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து, மத நல்லிணக்கத்துடனான சமூக ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க இவ்வாறான சந்தர்ப்பங்கள் வழிகோலும் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர் இத் தகைய நிகழ்வுகளால் மதங்களைக் கடந்த புரிந்துணர்வுடனான சமூக ஒருமைப் பாட்டை நிலைநிறுத்த முடியும் என சுட்டிக் காட்டினார்.
மாவட்ட முஸலீம் மத கலாசார உத்தியோகத்தர், கிராம மட்டத்தில் உள்ள பல முஸ்லிம் மதத்தலைவர்கள், மற்றும் முஸ்லிம் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் , அலுவலகஉத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




