
நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணமானவர்கள் பதவி விலகுவதே சிறந்தது என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
நாளை பகிஸ்கரிப்பு ஒட்டுமொத்த இலங்கையரின் ஏகோபித்த முடிவு. 6 ஆந்திகதி ஹர்த்தாலுக்கு இ.த.ஆ.சங்கம் பூரண ஆதரவு.
நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் பதவிவிலக வேண்டுமென்று நாட்டில் உள்ள பெருபான்மையானோரின் கோரிக்கை.
இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்து, நாளையதினம் (28.04.2022) பணிப்பகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதனை அனைவரும் ஏற்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதைவிட ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்வரும் 06.05.2020 (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பொதுக் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இந்த இரண்டு நாட்களும் அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது. அதிபர்கள் கல்வித் திணைக்களத்திற்கும், ஆசியர்கள் அதிபர்களுக்கும் தமது விடுமுறையை அறிவிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இனி வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் எமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் போராட்ட வடிவம் மாற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது – என குறிப்பிடப்பட்டுள்ளது.