அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை கடந்த இரண்டு வாரங்களாக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இரவு பகலாக தொடர்ச்சியாக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதி கோட்டா கோ கம என ஆர்ப்பாட்டக்காரர்களால் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி செயலகம் முன்பாக கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக்கோரி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றையதினம் ஊடகவியலாளர்களின் படங்கள் பாதுகாப்பு தரப்பினரால் குறித்த பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டு இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.


