சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியவர் மடக்கி பிடிப்பு

வவுனியாவில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய இளைஞன் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா- உக்குளாங்குளம் பகுதியில் கடைக்குச் சென்று நடந்து வந்த பெண் ஒருவரை, மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்த இளைஞன் ஒருவர், அப் பெண்ணின் இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுதுக் கொண்டு தப்பியோடிய நிலையில், குறித்த பெண் சத்தம் இட்டு கத்தியுள்ளார்.

இதனை, அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த இளைஞனை கார் ஒன்றில் விரட்டிச் சென்றமையுடன், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

திருட்டில் ஈடுபட்ட நபர் வவுனியா, வேப்பங்குளம் சந்தியில் பொலிஸார் மற்றும் இளைஞர்களால் மடக்கிப் பிடித்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், மோட்டர் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், குறித்த பெண்ணிடம் இருந்து அறுத்த இரண்டரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *