அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு இந்தோனேசியா வழங்கியுள்ளது.
மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தோனேசியாவின் தூதுவர் Dewi Gustina Tobing தெரிவித்துள்ளார்.
“உதவியின் மொத்த அளவு 3.1 டன்கள் ஆகும், இது 2022 ஏப்ரல் 28 மற்றும் மே 8 ஆகிய தேதிகளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் ஜகார்த்தாவிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
