சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஊடாக குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன!
வாழத்துடிக்கும் மக்களுக்கான தாகம் தீர்க்கும் குடிநீர் உதவிகள்..
சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தால் இன்று 27/04/2022 அம்பாறை மாவட்டத்தில் உள்ள நான்கு இடங்களில் குடிநீர் இன்றி தவித்த மிகவும் பின்தங்கிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பொது குடிநீர் வசதியும், மிகவும் குறைந்த வருமானத்தை ஈட்டும் இரண்டு குடும்பங்களுக்குமாக நான்கு குடிநீர் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு திறந்து கையளிக்கப்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள செங்காமம் கிராம மக்களுக்கும் சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீரச்சோலை கிராம மக்களுக்கும் வளத்தாப்பிட்டி மற்றும் பளவெளிக்கிராமங்களைச் சேர்ந்த நாகருச்சுதன் மற்றும் சமன்குமார ஆகியோரின் இல்லங்களில் நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் குழாய் குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டன.
இத்திட்டத்திற்கான முழுமையான நிதிப் பங்களிப்பை கொசோவோ நாட்டைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசிக்கும் மனித நேய அன்னை செவ்சேரே வக்கிம் பிக்காங்கி அம்மணி அவர்கள் புனித ரமழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தமது குடும்பத்தாரின் சார்பாக இந்த உதவிகளை அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான இணைப்பாளர் இரா. விஜயகுமாரனின் ஒருங்கிணைப்பில் சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஊடாக வழங்கி வைக்க முன்வந்திருந்தார்.
அந்த வகையில் குறித்த செயற்றிட்டத்திற்காக நிதிப் பங்களிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் களச் செயற்பாட்டில் அற்பணிப்போடு செயலாற்றிய செயற்பாட்டாளர்கள் இன்றைய நிகழ்வுகளில் பங்கு கொண்ட உறவுகள் அனைவருக்கும் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் நன்றிகளை தெரிவித்தனர்.
பல்வேறு சமூகப்பணிகளை தனது சொந்த நிதியில் முன்னெடுத்துவரும் இரா.விஜயகுமாரனும் இந் நிகழ்வில் கௌரவைக்கப்பட்டார்.



