
நாளைய தொழிற்சங்க நடவடிக்கையினால் ஒருநாள் சேவைகளுக்கு (One day Service) இடையூறு ஏற்படமாட்டாது என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களின் ஒரு நாள் சேவைகள் நாளைய தினமும் வழமை போல முன்னெடுக்கப்படுமென அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்திற்கு தமது ஒத்துழைப்பை வழங்கும் முகமாக நாளையதினம் (28) ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.