அனைத்து அரச நிர்மாணப்பணி திட்டங்களும் இடைநிறுத்தம்

அரச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து கட்டுமான பணி திட்டங்களையும் இடைநிறுத்துவதாக திறைசேரி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் அனைத்து அரச நிர்மாணப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் கட்டுமான பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *