
உங்களை புரிந்து கொள்கின்றோம் எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக இருக்கின்றது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது.
நேற்று யாழ்ப்பாணத்தில் சிவில் சமூக அமைப்புகள், புத்திஜீவிகள் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னரே இந்த அறிக்கையே வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
இலங்கைத்தீவு மிக அண்மைய நாட்களில் மிகப்பெரிய நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றது.
தென்னிலங்கை சிங்கள மக்கள் இந்த நெருக்கடிக்கு எதிராக மபெரும் எழுச்சியுடன் போராடி வருகின்றனர்
தென்னிலங்கை மக்களின் இந்த எழுச்சியின் நியாயத்தை கடந்த காலங்களில் பேரவலத்தை சந்தித்த இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களாகிய நாங்கள் புரிந்து கொள்கின்றோம் உணர்ந்து கொள்கின்றோம் மதிக்கின்றோம்
இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமான தமிழ் மக்கள் மீது காலங்காலமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய அடக்கு முறைகள் இதுவரை பாராமுகமாகவே தொடர்ந்து வருவது வேதனைக்குரியது.
இத்தருணத்தில் சிங்கள மக்கள தமிழ் மக்களாகிய எங்களது வலிகளையும் நியாயங்களையும் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தி நிற்கின்றோம்
உங்களை புரிந்து கொள்கின்றோம் எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக இருக்கின்றது என்பதை ஒருங்கிணைத்த தமிழர் கட்டமைப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது.