
அமெரிக்காவில் “Go Back Gota” என்ற பெயரில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஐ.நா பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியூயோர்க் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. ஐ.நா பொதுச் சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை மறுதினம் புதன்கிழமை உரைநிகழ்த்தவுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டமும் அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக நடத்தப்படவுள்ளது.“Go Back Gota” என்ற பெயரில் அணிதிரண்டு போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது – என்றுள்ளது.