பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி!

பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தவாரம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் குறித்த வயதினருக்கு பைஸர் தடுப்பூசிகள் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *