இறுதி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி!

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, இரண்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 32 ஆவது ஆட்டமாக இந்தப் போட்டி டுபாயில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஜெய்ஸ்வால் 49 ஓட்டங்களையும் லொம்மோர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பாக மயங்க் அகர்வால் 67 ஓட்டங்களையும் கேஎல் ராகுல் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக கார்த்திக் தியாகி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

குறித்த போட்டியின் ஆட்டநாயகனாக இறுதி ஓவரில் சிறப்பாக பந்துவீசி ஒரு ஓட்டத்தை மாத்திரமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய கார்த்திக் தியாகி தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *