பூஸ்ட்டர் தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானம்!

பூஸ்ட்டர் தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானம்!

நாட்டின் சனத்தொகையின் 67 வீதமானவர்களுக்கு பூஸ்ட்டர் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்குரிய நடடிவக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பூஸ்ட்டர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அதற்கான முற்பணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.,

நாட்டில்இதுவரை ஒரு கோடி 37 இலட்சத்து 49 ஆயிரத்து 897 பேர் முதலாவது தடுப்பூசியையும் ,ஒரு கோடி 10 இலட்சத்து 54 ஆயிரத்து 101 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *