சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! – எதிர்க்கட்சி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும்.

இதன் மூலம் புதியசபாநாயகர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பிக்கவுள்ளோம்.

சபாநாயகர் நீக்கப்பட்ட பின்னர் புதிய சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்படுவார். அதன் பின்னர் பிரதி சபாநாயகர் நியமிக்கப்படுவார்.

இதன் பின்னர் பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு அரசாங்கம் தோற்கடிக்கப்படும் – என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *