பொதுத்துறை ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது: நிதியமைச்சு

கொழும்பு, ஏப்ரல் 28: பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களின் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை (26) வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *