
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் எதிர்க்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு முன், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு கட்சித் தலைவர்கள் உடன்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்ந்து பிரதமரும் அமைச்சரவையும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அமைச்சரவையின் அதிகாரங்கள் அரச தலைவருக்கு மாற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிந்தைய திட்டத்தில் நாடாளுமன்றம் உடன்பட வேண்டும் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.