யாழ்ப்பாணம் குருநகரில் இருந்து இருவர் இன்று அதிகாலை தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் மக்கள் தமிழகம் நோக்கி அகதிகளாக செல்கின்றனர்.
இதற்கமைய இன்று அதிகாலையும் இருவர் தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
இவ்வாறு தமிழகம் சென்ற இருவரும் ஆணகள் எனவும் யாழ்ப்பாணம் குருநகரில் இருந்து இன்னுமொருவரின் படகை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
