
கொழும்பு, ஏப் 28
பல ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் இன்றைய தினம் வேலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் மற்றும் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவுள்ளன.
பஸ் உரிமையாளர்கள் விரும்பினால் மாத்திரம் சேவையில் இருந்து விலக முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.