பூச்சிக் கொல்லிகள், களை நாசினிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளுடனான திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டம் நேற்று முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பூச்சிக் கொல்லிகள், களை நாசினிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை பதிவாளரால் அங்கிகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்ய முடியுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பூச்சிக் கொல்லிகள், களை நாசினிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை இறக்குமதி செய்வதற்காக கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட முறைமையானது அவற்றின் விலைகளை அதிகரித்ததுடன்,பற்றாக்குறையை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுவந்த நிலையில், தற்போதுசிரமமின்றி விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமெனவும் விவசாய மற்றும் நீர்ப்பாசனஅமைச்சர் ஜானக வகும்புர மேலும் தெரிவித்துள்ளார்.