ஜனாதிபதி- அரசு தரப்பு எம்பிக்கள் இன்று சந்திப்பு

கொழும்பு, ஏப்ரல் 28: ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி எழுத்துமூலம் அறியப்படுத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் அரசாங்கத்தில் உள்ள சகல கட்சிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *