விதை இறக்குமதியையும் குறைப்பதற்கு அரசு முடிவு!

விதை இறக்குமதியையும் குறைப்பதற்கு அரசு முடிவு!

விவ­சாய நட­வ­டிக்­கைக்­குத் தேவை­யான விதை­களை இலங்­கை­யி­லேயே உற்­பத்தி செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். அடுத்த வரு­டம் முற்­ப­கு­தி­யில் விதை­கள் இறக்­கு­ம­தியை 50 வீதத்­தால் குறைப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்று விவ­சா­யத்­துறை அமைச்­சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்­தார். இது தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கருத்து வெளி­யிட்ட அவர் மேலும் கூறி­யவை வரு­மாறு,

இலங்­கைக்­குள்­ளேயே பல வகை­யான விதை­களை உற்­பத்தி செய்ய முடி­யும். எனி­னும், இறக்­கு­மதி பொரு­ளா­தா­ரத்­துக்கு பழக்­கப்­பட்­டுள்­ள­தால் விதை­கள் இறக்­கு­ம­திக்கு மட்­டும் வரு­டாந்­தம் 2 பில்­லி­யன் ரூபா செல­வ­ளிக்­கப்­ப­டு­கின்­றது.
எனவே, விதை­களை மட்­டு­மல்ல இலங்­கை­யில் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய அனைத்து வகை­யான உண­வுப் பொருள்­க­ளை­யும் இங்­கேயே உற்­பத்தி செய்­வ­து­தான் ஜனா­தி­ப­தி­யின் சுபீட்­சத்­தின் நோக்கு திட்­ட­மா­கும்.

முதற்­கட்­ட­மாக முதல் மூன்று வரு­டங்­க­ளுக்­குள் கிழங்கு, பெரிய வெங்­கா­யம் மற்­றும் மிள­காயை இலங்­கைக்­குள்­ளேயே உற்­பத்தி செய்­வ­துதான் எமது திட்­ட­மா­கும். குறிப்­பாக ஒரு வரு­டத்­துக்­குள் மிள­காய் இறக்­கு­மதி தடுக்­கப்­ப­டும். தம்­புள்ளை பகு­தி­யில் வெங்­கா­யத்­துக்­கான விதை­யும், நுவ­ரெ­லி­யா­வில் கிழங்­குக்­கான விதை­யும் உற்­பத்தி செய்­யப்­ப­டும். இலங்­கை­யில் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய அனைத்து விதை­க­ளும் உற்­பத்தி செய்­யப்­ப­டும். அடுத்த வருட முற்­ப­கு­தி­யில் விதை இறக்­கு­மதி 50 வீதத்­தால் குறைக்­கப்­ப­டும், என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *