நாட்டில் வெறிச்சோடி காணப்படும் பாடசாலைகள்!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகள் பல வெறிச் சோடிக் காணாப்படுகின்ளறன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளாவிய ரீதியில் 1000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பாடசாலைகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றன.

இருப்பினும் சில பாடசாலைகளில் இம்முறை கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மணவர்கள் சென்றமையையும், ஒரு சில ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுகின்றன. பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. தபாலகங்கள் உள்ளிட்ட சில அரச சேவைகள் இடம்பெறவில்லை.

தனியார் மற்றும் அரச பேருந்துகள், வர்த்தக செயற்பாடுகளும், வங்கி செயற்பாடுகளும் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *