யாழ் மாநகரத்தை அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு ,மாநகர சபை உள்ளிட்ட பல தரப்பினார் முயற்சி எடுத்து வருகின்றனர்.
அத்துடன் இரண்டு கட்டங்களாக பிரதான வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்டு,அதிகளவு பிளாஸ்டிக் போத்தல்கள் மீட்கப்பட்டிருந்தன.
மழை காலத்தில் வெள்ள நீர் வழிந்தோடும் வகையில் அவை துப்பரவு செய்யப்பட்டன.
எனினும் தற்போது யாழ்ப்பாணம் நகரில் உள்ள முன்னைய நடைபாதை வாய்க்கால் மதுபான ரின்களால் நிரம்பி காணப்படுகிறது.
இதனால் நீர் வழிந்தோடாமல் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இரவு நேரங்களில் பலர் அந்த பகுதியில் வைத்து பியர் அருந்தி விட்டு ரின்களை வீசி ஏறியலாம் என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


