கோட்ட அரசுக்கு எதிராக தம்பலகாமத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று தம்பலகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தினை தம்பலகாமம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ், சிங்கள,முஸ்லிம் என 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் தம்பலகாமம் நான்கு வாயில் பிள்ளையார் கோயிலில் ஆரம்பித்து நடைபவனியாகச் சென்று கண்டி – திருகோணமலை பிரதான வீதியிலுள்ள சந்தியில் இடம்பெற்றது.

இதனால் கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் தடைப்பட்டிருந்தன.

பின்னர் அங்கு வந்த பொலிஸார் போக்குவரத்தினை சீர் செய்ததை அடுத்து போக்குவரத்துக்கள் இடம்பெற்றன.

தம்பலகாமம் நான்கு வாயில் கோயில் சந்தியிலிருந்து ஆரம்பித்த இவ்வார்ப்பாட்டம் பாலம் போட்டாறுச் சந்தியில் நிறைவுற்றது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “கோட்டா ஹோ ஹோம்” ” பசில் கபுட்டா கா கா” முதலான கோசங்களை எழுப்பினர்

“விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” “உன்னை ஆதரித்த நாமே உன்னை எதிர்க்கிறோம்” முதலான வாசங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தி இருந்ததுடன், மாற்றுத் திறனாளிகளும் இதில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *