மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமை!

மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில்
உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமை!

மாண­வர்­க­ளுக்­கான தடுப்­பூ­சித் திட்­டத்­தில் உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும். அவர்­க­ளுக்கு பைஸர் தடுப்­பூ­சியே ஏற்­றப்­ப­டும் என்று கல்வி அமைச்­சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­தார்.
நாடா­ளு­மன்­றம் நேற்று முற்­ப­கல் 10 மணிக்கு சபா­நா­ய­கர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன தலை­மை­யில் கூடி­யது.

ஆரம்­பத்­தி­லேயே சபை­யின் கவ­னர்த்தை ஈர்த்த ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க, உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­க­ளுக்கு பாடத்­திட்­டத்தை நிறை­வு­செய்­ய­மு­டி­யா­மல் உள்­ளது. எனவே, அவர்­க­ளுக்­கான நிவா­ர­ணத் திட்­டம் பற்றி ஆரா­யப்­பட வேண்­டும் – என்று சுட்­டிக்­காட்­டி­னார்.
இதற்­குப் பதி­ல­ளித்த கல்வி அமைச்­சர் தினேஷ் குண­வர்­தன, இது தொடர்­பில் விரி­வா­ன­தொரு விளக்­கத்தை எதிர்­கா­லத்­தில் வழங்­கு­வேன். பரீட்­சை­கள் ஆணை­யா­ள­ரு­டன் அது பற்றி கலந்­து­ரை­யா­டப்­பட்­டு­வ­ரு­கின்­றது என்­றார்.

இத­னை­ய­டுத்து எழுந்த சம்­பிக்க ரண­வக்க, உயர்­தர மாண­வர்­க­ளுக்கு பைஸர் தடுப்­பூ­சியே ஏற்­றப்­பட வேண்­டும் என சுட்­டிக்­காட்­டி­னார்.
இதற்­குப் பதி­ல­ளித்த கல்வி அமைச்­சர், இது தொடர்­பில் ஜனா­தி­பதி கடந்த வாரமே கட்­ட­ளை­யொன்றை பிறப்­பித்­துள்­ளார். இதன்­பி­ர­கா­ரம் சுகா­தார மற்­றும் கல்வி அமைச்­சு­கள் பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளன. முத­லா­வ­தாக உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­க­ளுக்கு பைஸர் தடுப்­பூசி ஏற்­றப்­ப­டும். இதற்­கான வேலைத்­திட்­டம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *